அநுராதபுரம், ஹொரவாபெத்தானை, பத்தாவ பிரதேசத்தின் புகழ் பெற்ற இளம் கிரிக்கெட் வீரர் பைனாஸின் இல்லத்திற்கு நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் விஜயம் மேற்கொண்டு திறமையை பாராட்டி வாழ்த்தியதுடன் பணப்பரிசில்களையும் வழங்கிவைத்தார். 

“இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க தனது முகநூலில் அண்மையில் பதிவொன்றை இட்டிருந்தார். அதில் இளம் வீரர் ஒருவரின் திறமையான பந்துவீச்சு காணொளியொன்றை பதிவு செய்து  இவர் பற்றிய தகவலை எனக்கு தருமாறும், திறமையாக பந்துவீசக்கூடிய இவருக்கு எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் பாராட்டி அந்த காணொளியை பதிவு செய்ததுடன், மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கொண்டு சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட பந்துவீச்சாளராகவும் காணப்பட்டார்.

 குறித்த சிறுவன் அநுராதபுரம், ஹொரவாபொத்தான, பத்தாவ என்ற பிரதேசத்தினைச் சேர்ந்த மொஹம்மட் பழீல் மற்றும் மர்சூக்கா ஆகியோரின் மூன்றாவது புதல்வரான மொஹம்மட் பைனாஸ்  என்ற இளம் வீரராவார். 

வீரச்சோலை முஸ்லிம் வித்தியாலத்தில் கல்வி கற்றுவருகின்ற இவர்  கிறிக்கெட் விளையாட்டில் ஆர்வமானவர் எனவும் சிறுவயதிலிருந்து திறமையாக விளையாடக்கூடிய நபராக இருந்துவருகின்றார். ஹொரவாபொத்தான பிரதேசத்திலுள்ள ஹமாஸ் ரோயல் விளையாட்டுக்கழகத்தினூடாக விளையாடிவருவதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இளம் வீரர் பைனாஸின் திறமையை வாழ்த்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேரடியாக இளம் வீரரின் இல்லத்திற்கு சென்று வாழ்த்தியதுடன் பண பரிசில்களையும் வழங்கிவைத்தார். 

மேலும், அப்பிரதேசத்திலுள்ள மைதான பிரச்சினைகள் தொடர்பிலும் விளையாட்டுக்கழகங்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், இம்மாணவின் எதிர்கால கற்றல் செயற்பாடுகள் தொடர்பிலும்  பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர்.